Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

இந்து மக்கள் கட்சியினர் பாராளுமன்ற சபாநாயகருக்கு கங்கை புனித நீர் அனுப்பினர்

ஜுன் 24, 2019 11:48

கும்பகோணம்: பெரியார் வாழ்க என்று சொல்லி பதவி பிரமாணம் ஏற்றுக்கொண்ட தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களை கண்டித்து இந்து மக்கள் கட்சியினர் பாராளுமன்ற சபாநாயகருக்கு கோரிக்கை  மனுவும், கங்கை புனித நீரும் அனுப்பிவைத்தனர்.
  


கும்பகோணத்தில் இந்து மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி பொதுச்செயலாளர் குருமூர்த்தி தனது கட்சி தொண்டர்களுடன் இணைந்து இந்திய நாடாளுமன்ற சபாநாயகர் ஓம்.பிர்லாவிற்கு  தலைமை தபால் நிலையத்திலிருந்து கோரிக்கை மனுவும், கங்கை புனித நீரை பாட்டிலில் அடைத்து அனுப்பினார். 

அவர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது
தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்ட போது தந்தை பெரியார் வாழ்க என கூறியபடி பதவி ஏற்றுக்கொண்டனர். தமிழர்களை காட்டுமிராண்டிகள் என்றும், இந்தியாவிற்கு சுதந்திரம் வேண்டாம் என்றும் கூறியவர் பெரியார். 
அவர் ஒரு முறை கூட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்ததில்லை. 

இந்தநிலையில் அவரது பெயரை பாராளுமன்றத்தில் பயன்படுத்தியதன் மூலம் பாராளுமன்றத்தின் புனிதம் கெட்டுவிட்டது. எனவே, நாடாளுமன்றத்தின் புனிதத்தை காத்திட இந்த கடிதத்துடன் கங்கை புனித நீர் அனுப்பப்பட்டுள்ளது இந்த நீரினால் நாடாளுமன்றத்தில் தெளித்துவிட்டு சிறப்பு பூஜை செய்திட வேண்டும். 
இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்